அதிகூடிய மின் கட்டணத்தால் அவதி..

எச்.எம்.எம்.பர்ஸான்-

லங்கை மின்சார சபையால் மின் பாவனையாளர்களுக்கு இம்மாதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள மின் பட்டியலில் அதி கூடிய தொகையிட்டு வழங்கப்பட்டுள்ளதாக, பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இலங்கை மின்சார சபையின் வாழைச்சேனை கிளையின் மின் பாவனையாளர்களுக்கே இவ்வாறு கூடுதல் தொகை இட்டு பணத்தை செலுத்துமாறு மின் பட்டியல் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக, பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு மாதமும் நிலுவைகளின்றி தொடராக பணத்தை செலுத்தி வந்த போதும் இம்மாதம் (ஜுன்) வழங்கப்பட்டுள்ள மின் பட்டியலில் கூடுதல் கட்டணம் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக, பிரதேச மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான தெளிவுகளைப் பெற்றுக் கொள்ள, மட்டக்களப்பு மாவட்ட மின் பொறியியலாளர் பணிமனையை நோக்கி மின் பாவனையாளர்கள் படையெடுத்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -