இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக் கிளையான ஐக்கிய நாடுகள் சங்கம் கொரோனா நோய் காலத்தில் பாதுகாப்புக் கடமையில் இருக்கும் பொலிஸாருக்கும் பொலிஸ் நிலையங்களுக்கும் பாதுகாப்பு அங்கிகளும், முகக் கவசங்கள் மற்றும் நோய் நீக்குவதற்கான கிருமி அழிப்பு மருந்துகளை விசிறும் பம்கள் உள்ளிட்ட பல பொருட்களை வழங்கி வருகின்றது.
இன்று (05) வெள்ளம்மிபட்டி, கொட்டாஞ்சேனை, புதுக்கடை, கெசல்வத்தை, மருதானை, மாளிகாவத்தை, கிரேண்ட்பாஸ் ஆகிய பொலிஸ் நிலையங்களுக்கு உஸ்னம் அளவிடும் தேமா மீற்றர், டூஇன் வன் கிருமி அழிப்பு பம்கள் சங்கத்தின் தலைவர் கலாநிதி எம்.எம்.எம்.றுஸானுடீன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டபோது வெள்ளம்பிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரி ஓ.ஏ.யு. ஜெயசாந்த, வாழைத்தோட்ட பிரதான பொலிஸ் பரிசோதகரும், பொலிஸ் பொறுப்பதிகாரியுமான டபிள்யு.டி.பி. சேனாரத்ன ஆகியோர் குறித்த பொருட்களைப் பெற்றுக் கொண்டனர்.
இதன்போது கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் எம்.ஐ.எம்.இக்பால் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.