பொத்துவில் மண்ம‌லை பிரச்சினை இந்த‌ள‌வுக்கு முற்றியமைக்கு ஸ்ரீ.மு.காங்கிரசே காரணம் -முபாரக் மஜீட்

பைஷல் இஸ்மாயில் -

பொத்துவில் மண்ம‌லை பிரச்சினை இந்த‌ள‌வுக்கு முற்றிய‌மைக்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிர‌சின் பொடுபோக்கே இதற்குக் கார‌ண‌ம் என‌ உல‌மா க‌ட்சித் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார்.

பொத்துவில் ம‌ண்ம‌லை பிர‌ச்சினை என்ப‌து இன்று நேற்று ஆர‌ம்ப‌மான‌த‌ல்ல‌. இப்பிரச்சினையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நன்கறியும். 25 வ‌ருட‌மாக‌ பொத்துவிலை ஆட்சி செய்யும் அக்கட்சி இன்னும் ஏன் அம்மக்களின் பிரச்சினையை தீர்த்து வைக்க முடியாமல் இருக்கின்றது அதற்கான காரணம் என்ன? என்ற கேள்வியையும் தொடுத்தார்.

1965 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அரச வர்த்தமானி அறிவித்தலில் பொத்துவில் மண்மலை பிரதேசத்தில் 30 ஏக்கர் 03 ரூட் 02 பேர்ச்சஸ் காணி தொல்லியல் பிரதேசத்திற்குரியதென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1989 ஆம் ஆண்டு முத‌ல் முஸ்லிம் காங்கிர‌சுக்கு பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் இருந்த‌ போதும் 1994 ஆம் ஆண்டு முத‌ல் அக்க‌ட்சி அமைச்ச‌ர‌வையில் இருந்து வ‌ந்துள்ள‌து. க‌ட‌ந்த‌ மைத்திரி, ர‌ணில், ச‌ஜித் ஆட்சியின் போதுதான் பொத்துவில் ம‌ண்ம‌லை அபிவிருத்தி செய்ய‌ப்ப‌ட்டு புதிய‌ பாதைக‌ளும் போட‌ப்ப‌ட்டு முஸ்லிம் ம‌க்க‌ளும், முஸ்லிம் காங்கிர‌ஸ், ம‌க்க‌ள் காங்கிர‌ஸ், த‌மிழ் கூட்ட‌மைப்பு கொண்டு வ‌ந்த‌ ந‌ல்லாட்சி அர‌சின் ஜ‌னாதிப‌தி நேர‌டியாக‌ வ‌ந்து ம‌ண்ம‌லை ப‌ன்ச‌லையை திற‌ந்து வைத்தார்.

அப்போது இந்த‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளும், பொத்துவிலின் மு. கா வின் பொத்துவில் பிர‌தேச‌ ஆட்சியாள‌ர்க‌ளும் தூங்கிக்கொண்டிருந்தார்க‌ள். ர‌வூப் ஹ‌க்கீம் தேர்த‌ல் வ‌ந்தால் ம‌ட்டுமே கிழ‌க்குக்கு உல்லாச‌ம் வ‌ருப‌வ‌ர் என்ப‌தால் அவ‌ர் இது பற்றி அன்றைய‌ அரசிட‌ம் பேசுவ‌த‌ற்குரிய‌ அறிவோ, தைரிய‌மோ, உண‌ர்வோ இருக்க‌வில்லை. ந‌ம‌து ம‌ண்ணுக்கேற்ற‌ த‌லைமைக‌ளை ப‌ல‌ப்ப‌டுத்தாத‌ன் விளைவை இன்று பொத்துவில் உட்ப‌ட‌ முழு கிழ‌க்கு ம‌ண்ணும் அனுப‌விக்கிற‌து.

த‌ங்க‌ளின் ஜ‌னாதிப‌தி, பிர‌த‌மர் இருந்த நிலையில் தாமும் அமைச்ச‌ர்க‌ளாக‌ இருந்த‌ நிலையில் பொத்துவில் முஹுது ம‌லைக்கான‌ எல்லையை தெளிவாக‌ குறிப்பிட்டு புதிய‌ வ‌ர்த்தமாணி அறிவிப்பு செய்திருக்க‌ முடியும். அத‌னை செய்யாம‌ல் மௌன‌மாக‌ தூங்கிவிட்டு இந்த‌ அர‌சு தொல்பொருள்க‌ளை பாதுகாக்க‌ செய‌ல‌ணி போட்ட‌தும் துள்ளிக்குதிக்கிறார்க‌ள். தாங்க‌ள் அமைச்ச‌ர்க‌ளாக‌ இருக்கும் போது என்ன‌ அநியாய‌ம் ந‌ட‌ந்தாலும் அமைதியாக இருப்ப‌து, த‌ம‌க்கு எதிரான‌ ஆட்சியென்றால் ப‌யில்வான் லேகிய‌ம் திண்ற‌ எருமை போல் துள்ளிக்குதிப்ப‌தும் முஸ்லிம்க‌ள் வாக்குப்பெற்ற‌ க‌ட்சிக‌ளின் வ‌ழ‌மையாக‌ உள்ள‌து.

ஆக‌வே இந்த‌ தேர்த‌லில் பொத்துவில் ம‌க்க‌ளும் அம்பாரை மாவ‌ட்ட‌ முஸ்லிம்க‌ளும் அர‌சுக்கு ஆத‌ர‌வான‌ உல‌மா க‌ட்சி போன்ற‌ க‌ட்சிக‌ளுக்கு வாக்களித்து வெல்ல‌ வைக்கும் ப‌ட்ச‌த்தில் பொத்துவில் பிர‌ச்சினையை 1965 ஆம் ஆண்டைய‌ வ‌ர்த்த‌மாணி பிர‌க‌ர‌ம் தீர்வைக்காண்ப‌த‌ற்கு எம்மால் உரிமையுட‌ன் அர‌சிட‌ம் கொண்டு சென்று தீர்வை பெற்றுத்த‌ர‌ முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -