ஒரு பிரதேசம் காலத்திற்கு ஏற்றவாறான சாத்தியங்களின் வழியாக பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பெற்றுக் கொள்ள வேண்டுமே தவிர, வேறு குறுட்டு நம்பிக்கைகளூடாக அல்ல.
அதாஉல்லா ஒன்றும் வானில் இருந்து இந்த ஊரை இரட்சிக்க வந்த அற்புதமல்ல. அவருக்கு காலாகாலத்துக்கும் நாம் வாக்களித்துக் கடன் தீர்க்கும் அவசியமும் இல்லை. அவர் வெல்வதற்கான சாத்தியம் இம்மியளவு இருந்தால் கூட வாக்களிப்பதில் தவறில்லை. ஆனால் இம்முறை அவரது தோல்வியானது வெளிப்படையானதாக மாறியிருக்கிறது.
முப்பத்தியிரண்டு வருடங்களுக்கு முன்பு அதாஉல்லா என்பவர் ஒரு சாதாரண ஆசிரியர். அவருக்கு முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர் பதவி வழங்கியது. நமது மக்கள் வழங்கிய வாக்குகளினால் அது சாத்தியமானது. பின்னர் அக்கரைப்பற்று மற்றும் ஏனைய பிரதேச மக்களின் வாக்குகளினாலும் அவர் பாராளுமன்ற உறுப்பினராக உயர்ந்து அமைச்சராகவும் பதவி பெற்றார்.
அதன் பிறகு இந்த ஊரின் இரட்சகர் போல அவர் தன்னை மாற்றிக் கொண்டார். அவரை இரட்சகர் என நம்பும் படி இவ்வூர் மக்களுக்கு பழக்கப்படுத்தப்பட்டது. காலப்போக்கில் பல விதமான செல்வங்கள், சொகுசு வீடுகள், ஆடம்பர வாகனங்கள் என அவரது வாழ்வில் செழிப்பு ஏற்பட்டதற்கு நமது மக்கள் அளித்த வாக்குகளே காரணமாயிற்று.
அவரது குழந்தைகள் ஆடம்பர வாழ்வுக்கு தகவமைந்தனர். அவர்களுக்கும் அரசியல் பதவிகளும் படாடோபங்களும் வரப்பிரசாதமாக அமைந்தன. இவை அனைத்தும் நமது மக்களின் வாக்குகளினால் கிடைத்தமைக்கு அதாஉல்லா என்ன செய்தார்?
சில கட்டடங்களைக் கட்டி அதில் கூட தனக்கான பங்கு வருமானத்தை ஈட்டிக் கொண்டார்.
வருடக் கணக்கில் தனக்காக உழைத்துப் பாடுபட்ட இளைஞர்களுக்கு உத்தியோகம் வழங்கி அவர்களை ஆயுள் முழுவதும் தனக்கு அடிமைச் சேவகம் புரியும் கையாட்களாக மாற்றினார்.
இது இலங்கை அரசியலில் எங்கும் காணவே முடியாத அரிய செயல்களாகும்.
மூன்று தசாப்த கால படாடோப வாழ்வுக்கு ஆதாரமாக அமைந்த அக்கரைப்பற்றுக்கு அதாஉல்லாதான் நன்றி செலுத்த வேண்டுமே தவிர இங்குள்ள மக்களல்ல என்பதை நாம் ஏன் சிந்திக்கத் தவறுகிறோம்?
இந்த அக்கரைப்பற்று எனும் ஊரில் உண்மையான அக்கறை அதாஉல்லாவுக்கு இருந்தால் அவர் இவ்வூருக்கான அடுத்த அரசியல் பிரதிநிதித்துவம் பெறுவதற்கான சாத்தியத்தை கருத்தில் கொண்டு வாக்குகளை பயனுள்ள வழியில் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை முன்கொண்டு சென்றிருக்க வேண்டும். ஆனால், அக்கரைப்பற்றுக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கக் கூடாது எனும் கெடுதலான எண்ணத்தில் அதாஉல்லா இம்முறை செயல்படுவது தெரிகிறது.
அவர் வெல்லுவதற்கு வாய்ப்பில்லாத தறுவாயில் வீம்புக்கு போட்டியிட்டு நமது ஊர் வாக்குகளை ஊர்வாத நோய்க்குத் தாரை வார்த்து வீணாக்க எண்ணுகிறார். இதன் மூலம் தனக்கு பிறகு அக்கரைப்பற்றுக்கு எம்.பி வந்து விடக் கூடாது என திட்டமிடுகிறார். அவரை போஷித்த ஊருக்கு அவர் செய்யும் கைமாறு இதுதான். இந்த ஊர் ஏற்கனவே பல நன்றிக்கடன்களை அவருக்கு செய்து விட்டது. இனியும் வீணாக அவர் பின்னால் செல்வது பயனற்றது.
அதனால், அக்கரைப்பற்று விழித்துக்கொள்ள வேண்டும். பாராளுமன்ற பிரதிநிதியை பெறுவதற்கான இலகுவான தந்திரோபாயத்தை வகுத்துக் கொள்ள வேண்டும். இப்போதைக்கு அதாவுள்ளாவின் அரசியலுக்கு மறைமுகமாக பல வகையிலும் உதவி செய்து அவரால் பாதிக்கப்பட்ட
பல சமூக போராட்டங்களுக்கு தலைமை வழங்கிய சமூக செயற்பாட்டாளர் ஹனீபா மதனியை ஆதரிப்பதன் மூலமே அது சாத்தியம் என்றார்.