அதிகரித்து வரும் அர்த்தமற்ற இராணுவ வீதிச்சோதனைகள் கேள்வி எழுப்புகிறார் வைத்திய கலாநிதி சிவமோகன்.


ற்போது வட பகுதியில்இராணுவ மேலாதிக்கம் மிகமோசமான நிலையில் இருக்கின்றது. வீதியோரத்தில் இரண்டு கரைகளிலும் இராணுவத்தினர் ஆயுதங்களுடன் நின்று கொண்டு இரவிலே செல்பவர்களை மறித்து சோதனை செய்கிறார்கள்.என்ன சோதனை செய்கிறார்கள் என்பது பற்றி அறிய முடியாதுள்ளது.
கொரோனா நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட இராணுவம் எமது வட பிரதேசத்தை துவம்சம் செய்துகொண்டிருக்கின்றது.எனவே இந்த தேர்தலில் இராணுவ ஆட்சியை அகற்றக்கூடிய வகையில் மக்கள் செயற்படவேண்டும்.

சிங்கள மக்களுக்கு ஒரு நிலைப்பாடு ஒன்று உள்ளது. எவன் ஒருவன் தமிழனை அடக்கி ஆள்கின்றானோ அவனுக்கு ஆதரவாகத்தான் அவர்களின் குரல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது.இன்று எமது நிலைப்பாடும் வேறுவிதமாக இருக்கின்றது.

இராணுவத்தினரின் அடாவடி மிகவும் மோசமாகத்தான் இருக்கின்றது. இதனால் மக்கள் பெரும் அசௌகரியத்திற்கு ஆளாகின்றனர்.ன.இது என்ன தேவைக்காக இராணுவத்தினர் செய்கிறார்கள்.ஒரு ஊரடங்கு சட்டமும் இல்லை, கொரோனா பிரச்சினையும் இல்லை என தேர்தலுக்காக திறந்துவிடப்பட்ட நிலையில் இன்று ஒரு இராணுவ அடக்குமுறையில் மக்களை கொண்டு வந்து நிலைநிறுத்தியுள்ளது. எனவே இந்த அடக்குமுறை ஏற்றுக் கொள்ளக்கூடியதொன்றல்ல என வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -