அனுஷா சந்திரசேகரன் பதவி நீக்கப்பட்டாரா?


தலவாக்கலை பி.கேதீஸ்-
லையக மக்கள் முன்னணியிலிருந்து நான் நீக்கப்பட்டதாக ஊடகத்தின் வாயிலாக அறிந்தேன். இதற்கு நான் ஒரு சட்டத்தரணியாக பதிலளிப்பதே பொருத்தமானதாக இருக்கும். மலையக மக்கள் முன்னணியின் யாப்பின் ஏற்பாடுகளின், சரத்துக்களுக்கமைய நான் நீக்கப்படவில்லை. நானே பிரதி செயலாளர் நாயகமாக இன்றளவிலும் இருக்கிறேன் என சட்டத்தரணயும் நுவரெலியா மாவட்ட சுயேட்சை வேட்பாளரும் மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் நாயகமுமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

நான் பதவியிலிருக்கும்போதே இன்னொருவரை நியமித்ததற்கு எதிராக என்னால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். புரட்சி தலைவன் அமரர் சந்திரசேகரனின் மகளாக சட்டம் படித்த ஒரு சட்டத்தரணியாக இவ்வாறான ஊடக அறிக்கைகள் ஒருபோதும் என்னை பின்னடைய செய்யவோ அல்லது என்னுடைய அரசியல் பயணத்தை தடுக்கவோ இயலாது. எனது தந்தை அமரர் சந்திரசேகரன் எவ்வாறு 1994ம் ஆண்டு தனித்து களமிறங்கினாரோ அதே போன்று எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலும் நான் தனித்து களமிறங்குவதும் வெல்வதும் உறுதி. இம்முறை தேர்தலில் வெற்றி பெற்று அமரர் சந்திரசேகரன் வழிவந்த மலையக மக்கள் முன்னணி ஆதரவாளர்களுக்கும் மலையக மக்களுக்காகவும் எனது குரல் என்றென்றும் ஒலிக்கும் என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -