டைனமைட் வெடி பொருள் வெடித்தில் ஒருவர் பலி,மற்றொருவர காயம்


எம்.ஏ.முகமட்-
திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியாற்றுமுனை கரையோரப் பகுதியில் டைனமைட் வெடி பொருள் வெடித்ததில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக, கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நேற்று (09) மதியம் இடம் பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கரையோரத்தில் டைனமைட் வெடிபொருளினை இரும்பு வெட்டப்படும் சிறிய ரக வாளால், அறுத்துக் கட்டும்போது, வெடித்துச் சிதறியுள்ளது.

இதில் குறித்த இருவரும் இணைந்து கரையோர பகுதியில் வைத்து செயற்பட்டபோதே, இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

கிண்ணியா, இடிமன் பகுதியை சேர்ந்த செயினுலாப்தீன் நவாஸ் (37), எனும் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அத்தோடு கிண்ணியா, பெரியாற்றுமுனையை சேர்ந்த ஜௌபர் ரிசான் (26) எனும் குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -