மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா அப்புகஸ்தென்ன மேல் பிரிவு தோட்டத்தில் 31 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகிசிய தகவலினை அடுத்து நேற்று (05) இரவு எட்டு: மணியளவில் சுற்றிவளைப்பினை மேற்கொண்டு பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து கசிப்பு தயாரிப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 31 கோடா மற்றும் கசிப்பு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் உபகரணங்கள் போன்றன பொலிஸாரினால் இதன் போது மீட்கப்பட்டுள்ளன.
குறித்த கசிப்பு கள்ளச்சாரயம் தோட்டத்தொழிலாளர்களுக்கு விற்பனை செயவதற்காக தயாரிக்கப்பட இருந்ததாக பொலிஸார் மேற்கொண்டு ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளன.
சந்தேக நபர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்படவுள்ளதாகவும் எதிர்வரும் தினங்களில் ஹட்டன் நீதி மன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா மேற்கொண்டு வருகின்றனர்.