எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லை கங்கை பகுதியில் சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு டிப்பர் வாகனங்களுடன் நான்கு சந்தேக நபர்களையும் இன்று(31) பொலிஸ் விசேட அதிரடைப் படையினரால் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் கந்தளாய், வான்எல,ஜயந்திபுர பகுதியைச் சேர்ந்த 25,38,மற்றும் 40 வயதுகள் உடையோர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அல்லை கங்கைப் பகுதியில் விசேட ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்ட விசேட அதிரடைப்படையினரால் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்டுள்ள நிலையிலே கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் விசேட அதிரடைப் படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும்,டிப்பர் வாகனங்களையும் சேருநுவர பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் விசேட அதிரடைப்படை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளதோடு மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.