அல்லை கங்கை பகுதியில் சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு டிப்பர் வாகனங்களுடன் நான்கு சந்தேக நபர்களும் பொலிஸ் விசேட அதிரடைப் படையினரால் கைது.


எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லை கங்கை பகுதியில் சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு டிப்பர் வாகனங்களுடன் நான்கு சந்தேக நபர்களையும் இன்று(31) பொலிஸ் விசேட அதிரடைப் படையினரால் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் கந்தளாய், வான்எல,ஜயந்திபுர பகுதியைச் சேர்ந்த 25,38,மற்றும் 40 வயதுகள் உடையோர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அல்லை கங்கைப் பகுதியில் விசேட ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்ட விசேட அதிரடைப்படையினரால் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்டுள்ள நிலையிலே கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் விசேட அதிரடைப் படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும்,டிப்பர் வாகனங்களையும் சேருநுவர பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் விசேட அதிரடைப்படை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளதோடு மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -