அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமாக ஏற்றிச் செல்லப்பட்ட பன்றிகள் பறிமுதல்

எஸ்.எம்.எம்.முர்ஷித்-

னுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் இறைச்சிக்காக கொண்டுவரப்பட்ட பன்றிகள், ஏற்றி வந்த வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ஒரு சந்தேக நபரும் திங்கட்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிரதேசத்தில் இருந்து பொலனறுவைப் பகுதிக்கு அனுமதிப் பத்திரமின்றி இறைச்சிக்காக கொண்டுவரப்பட்ட ஒன்பது பன்றிகள் மற்றும் ஒரு வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ஒரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

சட்டவிரோதமான முறையில் இறைச்சிக்காக பன்றிகள் ஏற்றி வந்த சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத செயற்பாடுகளை பிடிப்பதற்கு பொலிஸார் துரித நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -