கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அதிகஷ்டப் பிரதேசங்களுக்கு வீடு வீடாக உலர் உணவு பொதிகள்..

எஸ்.எம்.எம்.முர்ஷித்-

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோணா வைரஸின் காரணமாக ஊடரங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அதிகஷ்டப் பிரதேசங்களுக்கு வீடு வீடாக சென்று உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

அந்தவகையில் முறுத்தனை, பிரம்படித்தீவு, சாராவெளி, பெரியவோரம், வட்டிபோட்டமடு, பூலாக்காடு, அம்புஸ்குடா, பொண்டுகள்சேனை போன்ற கிராமத்தில் மிகவும் வறிய நிலையில் வாழும் இறுநூறு குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

இதில் அரிசி, போதுமை மா, சீனி, சோயாமீற் அடங்களான 1300 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் அவுஸ்ரேலியா அன்பாலயம் அமைப்பின் நிதி உதவி மூலம் வழங்கப்பட்டன.

அன்பாலயம் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான க.கமலநேசனின் ஏற்பாட்டில் பிரம்படித்தீவு கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் ம.ஜெயசீலன், சங்க உறுப்பினர்கள் சகிதம் கலந்து கொண்டு உதவிகள் வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள முறுத்தனை, பிரம்படித்தீவு, சாராவெளி, பெரியவோரம், வட்டிபோட்டமடு, பூலாக்காடு, அம்புஸ்குடா, பொண்டுகள்சேனை போன்ற கிராமம் பெரிதும் பாதிக்கப்பட்டு அடிப்படை வசதிகளற்ற நிலையில் காணப்படுகின்றது.

குறித்த கிராம மக்களின் ஜீவனோபாய தொழிலாக விவசாயம், மீன்பிடி விளங்குகின்றது. அதிலும் பெரும்பலான மக்கள் கூலித் தொழில் செய்து வாழ்ந்து வந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோணா வைரஸின் காரணமாக ஊடரங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட நிலையில் தொழில் பாதிக்கப்பட்டு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -