இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளரது மோட்டார் சைக்கில் விசமிகளால் தீவைப்பு




காரைதீவு சகா-
மிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் தீவைத்து எரியூட்டப்பட்டிருக்கிறது.

இச்சம்பவம் கல்முனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவணை சுனாமி தொடர் மாடி வீட்டுத்திட்டப் பகுதியில் இன்று 12 ஆம் திகதி அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளரும் சமூகசெயற்பாட்டாளரும் பெரியநீலாவணைப்பகுதியில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட ஏழைமாணவர்களுக்கு வட்ஸ் அமைப்பின் மூலம் இலவச வகுப்புக்கான ஏற்பாட்டாளருமான பெரியநீலாவணை சுனாமித் தொடர் மாடியில் வசித்துக்கொண்டிருக்கும் கு.கோகுலன் அவர்களது மோட்டார்சைக்கிலே விசமிகளால் தீ வைக்கப்பட்டதில் முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது.

இம் மோட்டார் சைக்கிலை தொடர் மாடியின் கீழ்ப்பகுதியில் நிறுத்திவைத்துவிட்டு அவர் தனது மேல்மாடியில் தூக்கத்தில் இருந்தபோதே மோட்டார் சைக்கிலுக்குத் தீவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தீயினால் தொடர்மாடி முழுதும் நள்ளிரவுவேளையில் புகை மண்டலமாக காட்சியளித்தமையால் அதில் வசித்த மக்கள் மின்னொழுக்கு மாடியில் ஏற்பட்டுவிட்டது என நினைத்து மாடியில் இருந்து வெளியில் ஓடிச்சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்

.இத்தீயினால் அம்மோட்டார் சைக்கிலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றுமோர்மோட்டார் சைக்கில் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.இதுதொடர்பான மேலதிக விசாரணையினை கல்முனைப் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -