காட்டுப் மரங்களை வெட்டிய குடும்பஸ்தர் பொலிசாரினால் கைது.



கி
ண்ணியா பொலிஸ் பிரிவில் , ஈச்சந்தீவு பகுதியில் காட்டு கண்ணா மரங்களை வெட்டிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (28) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் அதே பகுதியைச் சேர்ந்த (வயது- 54)
எனும் குடும்பஸ்தவராவர்.

இச் சந்தேக நபர் கண்ணா காட்டு மரங்களை வெட்டிக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து வெட்டிய 16 மரக் கட்டைகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சந்தேக நபரையும், இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட மரக் கட்டைகளையும் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -