கிண்ணியா பொலிஸ் பிரிவில் , ஈச்சந்தீவு பகுதியில் காட்டு கண்ணா மரங்களை வெட்டிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (28) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் அதே பகுதியைச் சேர்ந்த (வயது- 54)
எனும் குடும்பஸ்தவராவர்.
இச் சந்தேக நபர் கண்ணா காட்டு மரங்களை வெட்டிக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து வெட்டிய 16 மரக் கட்டைகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சந்தேக நபரையும், இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட மரக் கட்டைகளையும் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.