பைஷல் இஸ்மாயில் -
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர் Dr.P.K. இரவீன்திரன் தலைமையிலான சத்திரசிகிச்சைப் பிரிவின் ஆற்றும் கரங்கள் அமைப்பினால் ஒலுவில் தொடக்கம் பொத்துவில் வரையான பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட சுமார் 85 வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு நோன்புப் பெருநாளுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி இன்று (25) வழங்கி வைக்கப்பட்டது.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை சத்திரசிகிச்சைப்பிரிவின் ஆற்றும் கரங்கள் அமைப்பினர் இவ்வாறான பல்வேறு மனிதநேய செயற்றிட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுப்பது வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.