இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமாகிய ஆறுமுகம் தொண்டமானின் திடிர் மறைவினால் மலையகமெங்கும் சோகமயமாக காட்சியளிக்கிறது.
தோட்டங்கள் அனைத்தும் வேலைநிறுத்தம் செய்யப்பட்டு ஆங்காங்கே கட்சி வேறுபாடின்றி அமரர் தொண்டமானின் உறுவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது
தொண்டமானின் மறைவை ஈடுசெய்ய முடியாத ஆதரவாளர்கள் கண்ணீர் மல்கி அஞ்சலி செலுத்திவருகின்றனர்
மலையகத்தின் அனைத்து நகரங்களிலும் வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன்
வாகனங்கள்,வர்த்தகநிலையங்கள்,வீடுகள்,வீதிகள் எங்கும் வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளது.
மேலும் சகல தொழிற்சங்கங்களினதும் கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிட்டு துக்கம் அனுஷ்டிக்கப்படுகின்றது.