வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி

தலவாக்கலை பி.கேதீஸ்-
லவாக்கலை டயகம பிரதான வீதியில் லிந்துலை வைத்தியசாலை அருகில் முச்சக்கரவண்டி ஒன்று 26.5.2020 செவ்வாய்கிழமை காலை வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இவ்விபத்து தொடர்பாக தெரியவருவதாவது எல்ஜின் பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி சென்றுக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியே இவ்வாறு வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இதனை செலுத்திய முச்சக்கரவண்டி சாரதி சிறுகாயங்களுடன் உயிர் தப்பினார். முச்சக்கரவண்டியின் சாரதியின் கவனயீனமே இவ்விபத்துக்கு காரணம் என தெரிவித்த லிந்துலை பொலிஸார் இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -