கொரொனா தொற்று காரணமாக திருகோணமலை நகர சபையினால் குறைந்த விலையில் மரக்கறிகள் விநியோகம்.

எப்.முபாரக்-
திருகோணமலை நகரசபைக்குட்பட்ட பகுதியில் கொரொனா வைரஸ் தாக்கம் காரணமாக வீடுகளில் இருப்பவர்களுக்கு குறைந்த விலையில் மரக்கறி வகைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

திருகோணமலை,அன்புவழிபுரம், அபய புரம்,உவர்மலை, பட்டினத்தெரு ,பெரியகடை,மற்றும்பவர்ஹவுஸ் போன்ற பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கு தற்போது நாட்டில் நிலவுகின்ற அசாதாரண நிலை காரணமாக அம் மக்களுக்கு குறைந்த விலைகளில் மரக்கறிகளை வினியோகம் செய்வதற்காக நகரசபை மற்றும் திருகோணமலை மாவட்ட வர்த்தக சம்மேளனம் மற்றும் சிவில் அமைப்புகள் மற்றும் சமூக நலன் விரும்பிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து இவ் மரக்கறிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டமானது தற்போது நாட்டில் உள்ள அசாதரண நிலை முடியும் வரைத் தொடர்ச்சியான முறையில் நடைபெறும் எனவும் நகர சபையினர் தெரிவிப்பதோடு, இத்திட்டம் தற்போது நாட்டில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் நேரங்களில் சன நெருசலைத் தடுப்பதே பிரதான நோக்காகும் எனவும் நகர சபையினர் தெரிவிக்கின்றனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -