திருகோணமலை சிறைச்சாலையில் கொரொனா தொற்று நீக்கி தெளிப்பு.



எப்.முபாரக்-
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொது இடங்களை சுத்தமாக வைத்திருக்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையில் கைதிகளின் மற்றும் உத்தியோகத்தர்களின் பாதுகாப்பு கருதி கிருமி நீக்கி இன்றும் (4) மேற்கொள்ளப்பட்டது.
திருகோணமலை அத்தியட்சகர் ரஜீவ சிறிமால் சில்வாவின் பணிப்புரைக்கமைய சிறைச்சாலையின் உள்பகுதிகளான கைதிகளின் அறைகள் மற்றும் அனைத்து பகுதிகளிலும் கிருமி நீக்கி தெளிக்கப்பட்டது.
அதேபோன்று உத்தியோகத்தர்கள் கடமை பார்க்கும் இடங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை போன்ற பகுதிகளும் கிருமி நீக்கி தெளிக்கப்பட்டது.
சிறைச்சாலையை அண்டிய பகுதிகளில் அடிக்கடி திருகோணமலை பொதுச் சுகாதார பகுதியினராலும் கிருமி தொற்று தெளிப்பதும் குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -