மாநகரசபை உறுப்பினரின் சொந்தநிதியில் மனிதாபிமானப்பணி.

காரைதீவு நிருபர் சகா-

மிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனின் சொந்தநிதியில் சவளக்கடை மற்றும் கல்முனை 2 பகுதிகளில் உலருணவுநிவாரணம் வழங்கிவைக்கப்பட்டது.

கொரொனா நெருக்கடியில் வாழ்வாதாரத்தை இழந்த சவளக்கடை வீட்டுத்தொகுதியிலுள்ள மக்களுக்கும் கல்முனை 2ஆம் பிரிவிலுள்ள மக்களுக்குமாக ஒவ்வொன்றும் 1000ருபா பெறுமதியான 120 பொதிகள் நேற்று வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வுகளில் சமுகசெயற்பாட்டாளர்களான சந்திரசேகரம் ராஜன் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் சமுகமளித்து அவற்றை மக்களுக்கு வழங்கிவைத்தனர்.

இவ்வுதவிக்கு இதயராசா பிரசாந்த கிசோர் ஆகியோரும் தம்மாலான உதவிகளை வழங்கியதோடு ஊரடங்குவேளையில் இவற்றைவிநியோகிக்க அனுமதிவழங்கிய பிரதேசசெயலார் அதிசயராஜ் சுகாதாரஅதிகாரி பொலிஸ்பொறுப்பதிகாரி ஆகியோருக்கும் நன்றி தெரிவிப்பதாக உறுபபினர் ராஜன் அங்கு தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -