நோட்டன் பிரிட்ஜ் எம்.கிருஸ்ணா-
அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கமைய பஸ் சேவையில் ஈடுபட சிரமமாகவு ள்ளதாகவும் தற்காலிகமாக சேவையிலிருந்து இடைநிறுத்தப்ப ட்டுள்ளதாக அட்டன் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் உப தலைவர் எம்.உதயகுமார் தெரிவித்தார் .
கொரோனா தொற்று அபாயத்தினால் நாட்ளாவிய ரீதியில் பொது போக்குவரத்து சேவையினருக்கு சுகாதார பிரிவினால் கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், தமது சேவையை தொடர சிரமம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் அட்டன் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார் .
இதன் போது தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில் , நாட்டில் ஏற்பட்டுள்ள அசாரதாரண சூழ் நிலையில் பொது மக்களை பாதுகாக்கும் நோக்கில் பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பஸ் சேவையின் போது 21 பயணிகளை மாத்திரமே ஏற்றிச்செல்ல வேண்டுமென சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கமையை, 27 அட்டன் பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போது அறிவிக்கப்பட்டது .
பொது மக்களின் நலன் கருதி மேற்கொண்டுள்ள 21 பயணிகள் மாத்திரம் பஸ்ஸில் பயணிக்க வேண்டும் என்ற கருத்தை நாம் ஏற்றுக்கொள்ளும் அதே வேளை சேவையை முன்னெடுப்பதில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சிரமங்களைஎதிர்நோக்குகின்றனர் .
இத்திட்டம் , பஸ் நடத்துனர் ,சாரதி ஆகியோரின் நாட் சம்பளம் மற்றும் எரிபொருள் (டீசல்) நிரப்புவதற்கான பணம் போன்ற பிராதான விடயங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான இக்கட்டான நிலையில், தொழில் துறையை கொண்டு நடத்த முடியாத சூழ் நிலை ஏற்பட்டுள்ளமை யினாலே சேவையை தற்காலிகமாக நிறுத்த அட்டன் தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் திர்மானித்துள்ளதாகவும் அரசாங்கம் எமது தொழில்துறையை முன்னெடுக்கும் வகையில் மானிய அடிப்படையில் எரிபொருள் அல்லது கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதே வேலை அரசாங்கத்தினால் நாடளாவிய ரீதியில் வழங்கப்படும் 5000/ நிவாரணத் தொகையை பொருந்தோட்ட பகுதிகளிலுள்ள தனியார் பஸ் சாரதிகள் , நடத்துனர்கள் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனை பெற்றுக்கொடுக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன் போது சுட்டிக்காட்டினார்.