திருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திருகோணமலைக்குச் கொண்டு சென்ற ஒரு தொகை உபயோகத்திற்கு உதவாத பொருட்கள் கைப்பற்றல்,இருவர் கைது.


எப்.முபாரக்-
திருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திருகோணமலைக்குச் கொண்டு சென்ற ஒரு தொகை உபயோகத்திற்கு உதவாத பொருட்களை இன்று(12) கைப்பற்றியதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு லொறியொன்றில் கொண்டு சென்ற போதே அக்போபுர இராணுவ சோதனை சாவடியில் வைத்து கைப்பற்றியதாகவும்,இதனை கொண்டு சென்ற போதே லொறியின் சாரதியையும்,உதவியாளரையும் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த லொறியில் பாவனைக்குதவாத உலருணவுப் பொருட்களான மாவு,பருப்பு,சோயாமீட் மற்றும் மாசிப் பொருட்களையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சோதனை நடவடிக்கையினை பொலிஸாரின் அனுமதியுடன் பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் இச்சோதனைகள் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -