Online சேவை வழியாக மாத்திரம் பொலிஸ் அனுமதி (Clearance) சான்றிதழ்கள்

ஐ. ஏ. காதிர் கான்-

ணைய வழி ஒன்லைன் (Online) முறை மூலமாக மாத்திரம் பொலிஸ் நற்சான்றிதழ் (Police Clearance) வழங்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று இலங்கையில் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. எனவே, அடையாளம் காணப்படாத நோய்த் தொற்றுடையவர்கள் சமூகத்தில் காணப்பட வாய்ப்பு இருக்கலாம் என்பதால், பொலிஸ் தலைமையகத்தால் வழங்கப்படும் நற்சான்றிதழை, Online முறை மூலம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், பொலிஸ் நற்சான்றிதழுக்கான விண்ணப்பங்களை ஏற்கும், கொழும்பு மாவட்ட, பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகம், இரண்டு வாரங்களுக்கு மூடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -