கினிகத்தேனை பிட்டவல பகுதியில் லொறி மோட்டார் சைக்கில் நேருக்கு நேர் மோதி விபத்து இளைஞன் பலி.


ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை ஹொரகட பிட்டவல வீதியில் லொறி ஒன்றும் மோட்டார் சைக்கில் ஒன்றும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (05) பகல் 2.00 அளிவில் ஹொரகட வெதும்பகம் சந்தியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் ஹொரகட பிட்டவல பகுதியை சேர்ந்த அனூச தில்சான் வயது 19 என்ற இளைஞனே இவ்விபத்தில் பலியானதாகவும் இவரது சடலம் கினிகத்தேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவுது கினிகத்தேனை பகுதியிலிருந்து ஹொரகட வழியாக பிட்டவல தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிலும் ஹொரகட வழியாக கினிகத்தேனையை நோக்கி வந்த லொறியுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
குறித்த மோட்டார் சைக்கில் வளைவு பகுதியில் வழுக்கிச் சென்றதால் இளைஞனுக்கு வேகத்தினை கட்டுப்படுத்த முடியாது. இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -