பொதுநல செயற்பாட்டாளர்கள் கேள்வி-
ஜப்பானுக்கு சென்று கடந்த வாரங்களில் நாடு திரும்பிய மொட்டு கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் ஒருவர் கொரோனா தனிமைப்படுத்தல் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஜப்பானுக்கு சென்றிருந்த இவர் அங்கிருந்து சிங்கப்பூர், மலேசியா, இந்தியா ஆகிய நாடுகளூடாக பயணித்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார் என்றும் அங்கிருந்து அவருடைய பூர்வீக கிராமத்துக்கு நேரடியாக சென்று வேட்பு மனு தாக்கலுக்காக அம்பாறை மாவட்டத்தை வந்தடைந்தார் என்றும் தெரிய வருகின்றது.
இவர் அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ், முஸ்லிம் கிராமங்களுக்கு ஊரடங்கு நேரத்திலும் நேரில் சென்று நேற்று திங்கட்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டார் என்றும் சொல்லப்படுகின்றது.
இந்நிலையில் இவர் ஏன் கொரோனா பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவில்லை? இவர் ஏன் கொரோனா காவியாக இருக்க முடியாது? என்று அரசியல் சமூக பொதுநல செயற்பாட்டாளர்கள் வினவுகின்றனர்.
இவரையும், இவரை போன்றவர்களையும் உடனடியாக தனிமைப்படுத்தி பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட தரப்பினர் கோரப்படுகின்றனர்.
ஜப்பானுக்கு சென்று கடந்த வாரங்களில் நாடு திரும்பிய மொட்டு கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் ஒருவர் கொரோனா தனிமைப்படுத்தல் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஜப்பானுக்கு சென்றிருந்த இவர் அங்கிருந்து சிங்கப்பூர், மலேசியா, இந்தியா ஆகிய நாடுகளூடாக பயணித்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார் என்றும் அங்கிருந்து அவருடைய பூர்வீக கிராமத்துக்கு நேரடியாக சென்று வேட்பு மனு தாக்கலுக்காக அம்பாறை மாவட்டத்தை வந்தடைந்தார் என்றும் தெரிய வருகின்றது.
இவர் அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ், முஸ்லிம் கிராமங்களுக்கு ஊரடங்கு நேரத்திலும் நேரில் சென்று நேற்று திங்கட்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டார் என்றும் சொல்லப்படுகின்றது.
இந்நிலையில் இவர் ஏன் கொரோனா பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவில்லை? இவர் ஏன் கொரோனா காவியாக இருக்க முடியாது? என்று அரசியல் சமூக பொதுநல செயற்பாட்டாளர்கள் வினவுகின்றனர்.
இவரையும், இவரை போன்றவர்களையும் உடனடியாக தனிமைப்படுத்தி பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட தரப்பினர் கோரப்படுகின்றனர்.