150 வருடம் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு அட்டன் பன்மூர் தெப்பகுளம் அணைக்கட்டை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் திறந்த வைத்தார்
கடந்த மழை காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கெடுப்பினால் உடைப்பெடுத்த பன்மூர் குளத்தினால் 150 மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பாதிப்படைந்தனர்
இந் நிலையில் தொழிலாளர் தேசிய முன்னணியின் செனன் வட்டார அமைப்பாளர் விஜேந்திரனின் வேண்டுகோளுக்கிணங்க குறித்த பிரதேசத்திற்கு விஜயம் செய்த திலகராஜ் உடைப்பெடுத்த அணைக்கட்டை புனரமைக்க கம்பெரலிய வேலைத்திட்டத்தினூடாக 40 லட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்தார்
பன்மூர் தோட்ட இந்துக்களால் வருடாந்தம் கொண்டாடப்படும் சிறப்பு வாய்ந்த தெப்பதேர் விழா இடம்பெறும் மேற்குறிப்பிட்ட குளம் பன்மூர் தெப்பகுளம் என பெயர் சிறப்பு பெற்றது விளங்குகிறது
பன்மூர் தெப்பகுளம் அணைக்கட்டு புனரைமைக்ப்பட்டு மக்கள் பாவணைக்கு கையளிக்கும் நிகழ்வில் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், தொ.தே. ச தேசிய அமைப்பாளர் ஜி.நகுலேஸ்வன் உட்பட பிரதேச மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.




