அரசாங்கத்தினால் தற்காலிகமாக பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்ட பின்னர் நாளை காலை 10 மணி வரையில் மாத்திரம் அனைத்து மக்கள் வங்கி கிளைகளையும் திறக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அனைத்து மத்திய வங்கி கிளைகளிடமும் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
அதனடிப்படையில் கொழும்பு, கம்பஹா, புத்தளம் மாவட்டங்கள் மற்றும் வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இவ்வாறு மக்கள் வங்கி திறக்கப்பட உள்ளது.
வங்கியினால் ஒவ்வொருவருக்கு இடையிலும் குறைந்தது ஒரு மீட்டர் அளவு இடைவெளி வைக்குமாறும் வங்கி அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கும் ஆலோசனைகளை கடைபிடிக்குமாறு மக்கள் வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலே குறிப்பிட்ட மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -