எதிர்வரும் பண்டிகைக் காலத்திற்குத் தேவையான புடவைகளைக் கொள்வனவு செய்வதை, தற்காலிகமாகத் தவிர்த்துக் கொள்வது, கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுப்பதற்கு பெரும் உதவியாக அமையும் என்று, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
புடவை முதலானவற்றைக் கொள்வனவு செய்யும் பொழுது, சில வேளைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் புடவைகளைத் தொடுதல், அந்த இடங்களில் ஒன்று கூடுதல் ஆகியவற்றின் மூலம் நோய் பரவக்கூடிய அனர்த்தம் இடம்பெறக் கூடும் என்றும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக, பொது மக்களின் பாதுகாப்பு நடவடிக்கையாக பெரும் எண்ணிக்கையில் பொது மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிரக்குமாறும் வைத்தியர் ஜாசிங்க பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.