பண்டிகை பெருநாள் காலத்தில் ஆடைகள் கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறு அறிவித்தல்

ஐ. ஏ. காதிர் கான்-

திர்வரும் பண்டிகைக் காலத்திற்குத் தேவையான புடவைகளைக் கொள்வனவு செய்வதை, தற்காலிகமாகத் தவிர்த்துக் கொள்வது, கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுப்பதற்கு பெரும் உதவியாக அமையும் என்று, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

புடவை முதலானவற்றைக் கொள்வனவு செய்யும் பொழுது, சில வேளைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் புடவைகளைத் தொடுதல், அந்த இடங்களில் ஒன்று கூடுதல் ஆகியவற்றின் மூலம் நோய் பரவக்கூடிய அனர்த்தம் இடம்பெறக் கூடும் என்றும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக, பொது மக்களின் பாதுகாப்பு நடவடிக்கையாக பெரும் எண்ணிக்கையில் பொது மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிரக்குமாறும் வைத்தியர் ஜாசிங்க பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -