அகில இலங்கை பாடசாலை மட்ட குத்துச்சண்டை போட்டியில் சாதித்த டயகம மாணவி...



நோர்ட்டன் பிரிட்ஜ் . எம்.கிருஸ்ணா-

கில இலங்கை பாடசாலை மட்ட குத்துச்சண்டை போட்டியில் கனிஷ்ட பிரிவில், 50-52 எடைப்பிரிவில் ம. மா/நு/சௌமியமூர்த்தி தொண்டமான் கல்லூரியில் தரம் 11இல் கல்வி பயிலும் சி. சபிலாஷினி என்ற மாணவி இரண்டாம் இடத்தை பெற்று பாடசாலைக்கும் மலையகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இவர் டயகம மேற்கு ,2ம் பிரிவில் வசிக்கிறார். இவரின் பயிற்றுவிப்பாளராக அதே பாடசாலையில் ஆசிரியராக கடமை புரியும் செ. செபஸ்டிபத்திக்ராஜ் (செபஸ்டியன்) இருக்கிறார்.

இப்போட்டியானது கடந்த 15ஆம் திகதியில் இருந்து 19ஆம் திகதி பெப்ரவரி வரை மாத்தறை நாரந்தெனிய தேசியப்பாடசாலையில் நடைபெற்றது. இப்போட்டிக்காக இப்பாடசாலையில் இருந்து 3ஆண் மாணவர்களும் ஒரு மாணவியுமாக நால்வர் இப்போட்டிக்கு அழைத்ததுச் செல்லப்பட்டனர்.

எனினும் போட்டியில் மாணவியொருவரே இரண்டாம் இடத்தை பெற்றதற்காக இவருக்கு வெள்ளி பதக்கம் வழங்கப்பட்டது. இம்மாஙவி தோட்டத் தொழிலாளியின் பிள்ளையாவார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -