சர்வதேச அளவில் சாதித்த மாணவியை சாய்ந்தமருதில் கௌரவித்தார் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா !!

நூருள் ஹுதா உமர்-
விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியில் சர்வதேச விருது வென்ற மாணவி பார்த்திமா ஷைரீன் இனாம் மௌலானாவை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு மருதம் கலைக்கூடல் மன்ற ஏற்பாட்டில் இன்று (02) மாலை மாளிகைக்காடு பாவா ரோயல் மண்டபத்தில் நடைபெற்றது.

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளரும் முன்னாள் சாய்ந்தமருது, அக்கரைப்பற்று பிரதேச செயலாளருமான ஏ.எல்.எம். சலீம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சரும், தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள் கலந்து கொண்டார்.

மேலும் கௌரவ அதிதியாக தேசிய காங்கிரசின் சிரேஷ்ட பிரதி தலைவரும், இராஜாதந்திரியுமான வைத்தியர் ஏ. உதுமாலெப்பை அவர்களும் விசேட அதிதிகளாக தேசிய காங்கிரசின் முக்கியஸ்தர்கள், மருதம் கலை கூடல் மன்ற தலைவர், செயலாளர், உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், கல்விமான்கள், வர்த்தக பிரதிநிதிகள், பிரதேச இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -