அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரம் ஒழுங்கு செய்திருந்த வருடாந்த ஊடக குடும்ப ஒன்று கூடல்

அஸ்ஹர் இப்றாஹிம்-
மிழ் முஸ்லிம் சமூகங்களுக்கடையில் பரஸ்பர ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் வகையில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரம் ஒழுங்கு செய்திருந்த வருடாந்த ஊடக குடும்ப ஒன்று கூடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அட்டப்பள்ளம் ஒசாகா ரிசோட்டில் போரத்தின் தலைவர் எம்.சஹாப்தீன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகவும் , முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை , நிந்தவுர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.தாஹிர் ( அஸ்றப்) , சாய்ந்தமருது பெமிலி சொய்ஸ் முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எச்.எம்.நௌபர் , அக்கரைப்பற்று சிமாட் சிற்றி முகாமைத்துவ பணிப்பாளர் முஹம்மது ஹம்தூன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

ஊடக குடும்பத்தைச் சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் , இசை நிகழ்வுகள் ஊடகவியலாளர்களுக்கான புதிய ரீ சேட் அறிமுகம் மற்றும் பொழுது போக்கு அம்சங்கள் இடம்பெற்றதுடன் சிறார்களுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -