கொட்டகலை வூட்டன் ஹில் முத்துமாரியம்மன் தேர் திருவிழா இன்று மிக சிறப்பாக இடம்பெற்றது

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்- 
கொட்டகலை அருள்மிகு வூட்டன் ஹில் முத்துமாரியமன் அம்மன் மாசிமக தேர்த்திருவிழா இன்று (07) பக்த அடியார்கள் புடைசூழ வேத வாத்தியங்கள் முழங்க சிறப்பாக இடம்பெற்றன.
விசேட வசந்த மண்டப பூஜையுடன் சண்டியா ரூபினியாக அம்பிகை எழுந்தருளி உள்வீதி வலத்துடன் அலங்கரிக்கப்பட்ட தேரிவில் வெளி வீதி வலம் வந்து ரொசிட்டா நகர் வரை சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்த.
இத்தேர் திருவிழாவில் கலை கலாசார அம்சங்கள்,மேளதாள வாத்தியங்கள் ஆகியன இடம்பெற்றன.
அதனை தொடர்ந்து பக்த அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன் பிரயாசித்த அபிசேகம்,நடைபெற்று அடியார்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.
நாளை ஞாயிற்றுக்கிழமை தீர்த்த உட்சவம் நடைபெற்று நாளை மறுதினம் வைரவர் மடையுடன் இத்தேர் திருவிழா இனிதே நிறைவுபெறவுள்ளன.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -