நாட்டிலிருந்து குருட்டுத்தன்;மையினை இல்லாதொழிப்போம் எனும் தொனிப்பொருளில் குளுக்கோமாவினால் ஏற்படும் குருட்டுத்தன்மையினை இல்லதொழிப்பதற்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் தாதியர்,மற்றும் ஊழியர்கள் இணைந்து ஒழுங்கு செய்திருந்த விழிப்புணர்வு ஊர்வலம் இன்று ஹட்டனில் நடைபெற்றன.
இவ் ஊர்வலம் இன்று (06) திகதி காலை 8.30 மணிக்கு ஹட்டன் மல்லியை பூ சந்தியிலிருந்து ஆரம்பமாகி ஹட்டன் பஸ் தரிப்பு நிலையம் வைர சென்றடைந்தது.
இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் நாட்டிலிருந்து குருட்டுத்தன்;மையினை ஒழிப்போம்,குளுக்மோ உங்கள் கண்களை குருடாக்கும்,குளுக்கோமாவிலிருந்து பாதுகாப்பு பெருவொம். என்ற பதாதைகளை ஏந்திய வண்ணம் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
இதன் போது குளுக்கோமா தொடர்பாக விழிப்பூட்ட துண்டி பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் வைத்தியர்கள் தாதியர்கள் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.