கொரானா கோர பிடியிலிருந்து மக்களை காக்க கொட்டகலையில் நவகலச பூஜை.


ஹட்டன் கே.சுந்தரலிங்கம் -
கொரானா கோர பிடியிலிருந்து மக்களை காப்பதற்காகவும், நோயுற்றவர்கள் விரைவில் சுகமடையயும்,நட்டுக்கும் நாட்டு மக்களுக்கு நல்லாசி வேண்டியயும் இன்று (20) கொட்டகலை முத்துமாரியம்மன் தேவஸ்த்தானத்தில் விசேட நவகலச பூஜையொன்று ஆலய பிரதம குரு கிரிகால பாமினி சிவஸ்ரீ ஜெயராம நிதர்சன குருக்கள் தலைமையில் நடைபெற்றன.
அரசாங்கம் மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டமையினால் குறைந்தளவு பக்தர்கiளே இந்த பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டனர்..
இதன் போது விநாயகர் வழிபாடு ,விசேட யாக பூஜை,அம்பாளுக்கு விசேட பூஜைகள் ஆகிய இடம்பெற்றதுடன் கொரானாவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நோய் தீர வேண்டி விசேட பிராத்தனைகளும் இடம்பெற்றன.
இதே வேளை அரசாங்கம் கொரோனா கொவிட் 19 நோய் பரவுவதை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு ஒத்துழைக்ககும் வகையில் மக்கள் கூட்டம் கூட்டமாக கோயிலுக்கு வருகை தராது தனித்தனியாக வந்து வழிபாடுகளில் ஈடுபடுமாறும் அவர் இதன் போது பக்த அடியார்களிடம் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -