தலீபான்களிடம் அமெரிக்கா சரணடைந்து விட்டது ஈரான் தெரிவிப்பு.


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
மெரிக்கா-தலீபான் இடையிலான யுத்த நிறுத்த ஒப்பந்தம் குறித்து ஈரான் நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜாவத் ஜரிப் கருத்து தெரிவித்ததாவது:-

ஆப்கானிஸ்தானுக்குள் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் நுழைந்திருக்கக் கூடாது. ஆனால் அவர்கள் நுழைந்து விட்டனர். அதனால் ஏற்பட்ட பின்விளைவுகளுக்கு மற்றவர்கள் மீது பழி சுமத்தினார்கள். 19 வருடகால அவமானத்துக்கு பிறகு, தலீபான்களிடம் அமெரிக்கா சரணடைந்து விட்டது.

இருந்தாலும், சிரியா, ஈராக், யெமன் ஆகிய நாடுகளில் செய்ததுபோல், ஆப்கானிஸ்தானிலும் பெரிய குழப்பத்தை உருவாக்கி விட்டுத்தான் அமெரிக்கா வெளியேறும். தலீபான்களுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்காவுக்கு எந்தவித உரிமை கிடையாது என்று அவர் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -