அமெரிக்கா-தலீபான் இடையிலான யுத்த நிறுத்த ஒப்பந்தம் குறித்து ஈரான் நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜாவத் ஜரிப் கருத்து தெரிவித்ததாவது:-
ஆப்கானிஸ்தானுக்குள் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் நுழைந்திருக்கக் கூடாது. ஆனால் அவர்கள் நுழைந்து விட்டனர். அதனால் ஏற்பட்ட பின்விளைவுகளுக்கு மற்றவர்கள் மீது பழி சுமத்தினார்கள். 19 வருடகால அவமானத்துக்கு பிறகு, தலீபான்களிடம் அமெரிக்கா சரணடைந்து விட்டது.
இருந்தாலும், சிரியா, ஈராக், யெமன் ஆகிய நாடுகளில் செய்ததுபோல், ஆப்கானிஸ்தானிலும் பெரிய குழப்பத்தை உருவாக்கி விட்டுத்தான் அமெரிக்கா வெளியேறும். தலீபான்களுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்காவுக்கு எந்தவித உரிமை கிடையாது என்று அவர் கூறினார்.