ரணிலும் சஜித்தும் பிரிந்து போட்டியிட்டால் அது தற்கொலைக்கு சமமாகும்-ருவான்

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-

UNPயும், ஐக்கிய மக்கள்
சக்தியும் பிரிந்த நிலையில் பொதுத்தேர்தலில் போட்டியிட்டால் அது பரஸ்பர தற்கொலைக்கு ஒப்பானதாகும் என UNPயின் கம்பஹா மாவட்ட பாரளுமன்ற முன்னாள் உறுப்பினர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

UNPயும் ஐக்கிய மக்கள் சக்தியும் தமக்கிடையிலான வேறுபாடுகளை களைந்து போட்டியிடவேண்டும்.

இல்லையேல் சில மாவட்டங்களில் இரண்டு பிரிவுகளுக்கும் போட்டியிடமுடியாத நிலை ஏற்பட்டு விடும். வேட்பாளர் தெரிவை பொறுத்தவரையில் வேட்பாளர்கள் நிராகரிக்கப்பட்டால் அது இரண்டு கட்சிகளும் தனித்தனியே போட்டியிட வேண்டிய சூழ்நிலையையே ஏற்படுத்தும்.

இது கோட்டாபய அரசாங்கத்துக்கு சவாலாக இருக்கமாட்டாது. எனவே ரணில்- சஜித் அணிகள் வேறுபாடுகளை களைந்து ஒன்றிணைய வேண்டும் என கோரியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -