மயில்வாகனம் உதயகுமார் அவர்கள் தனது சொந்த நிதியின் மூலமாக மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னெடுத்து வரும் கல்வி, சுகாதார, விளையாட்டு மற்றும் பொதுத்துறை சார் சமூகப் பணிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் ஜேர்மனியை தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச சமாதான பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி வைத்துள்ளது.
ஜேர்மனியின் சர்வதேச சமாதான பல்கலைக்கழகத்தின் ஊடாக பல்வேறு துறைசார்ந்த பணியாளர்களுக்கும் சாதனையாளர்களுக்கும் கௌரவப் பட்டம் வழங்கி வைக்கப்பட்டு வருகிறது.
அந்த அடிப்படையில் இம்முறை இலங்கை சார்பில் மலையக மக்களுக்காக தனது சொந்த முயற்சியில் சமூக பணிகளை முன்னெடுத்து வரும் மயில்வாகனம் உதயகுமார் அவர்கள் கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -