கொரோனாவை எதிர்த்து போராட இலங்கை உள்பட 64 நாடுகளுக்கு $174 Million அமெரிக்கா நிதியுதவி!


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
லகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட இலங்கைக்கு $1.3 Million ( சுமார் 25 கோடி ரூபா ) உட்பட, 64 நாடுகளுக்கு $174 Million ( சுமார் 3,345 கோடி ரூபா ) நிதியுதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரியிலும் $100 Million ( சுமார் 1,850 கோடி ரூபா ) சீனா உள்பட ஏனைய நாடுகளுக்கு நிதியுதவியை அமெரிக்கா அறிவித்தது.
கொரோனா வைரஸ் அபாயம் அதிகமுள்ள நாடுகளில், நோய் பரவுவதை கட்டுப்பாட்டுக்குள் வைக்க, கூடுதலான நிதியுதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந் நிதியுதவி, ஆய்வு கூடங்களை உருவாக்கவும், கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக கண்டறியவும், தொழில்நுட்ப நிபுணர்களை தயார்நிலையில் வைத்திருப்பதற்காகவும் வழங்கப்படுகிறது.

இதேபோல், இந்தியாவுக்கு $2.9 Million ( சுமார் 55 கோடி ரூபா ) , நேபாளத்திற்கு $1.8 Million ( சுமார் 35 கோடி ரூபா ) பங்களாதேஸிற்கு $3.4 Million ( சுமார் 65 கோடி ரூபா ) , ஆப்கானிஸ்தானிற்கு $5 Million ( சுமார் 95 கோடி ரூபா ) வரை அமெரிக்கா நிதியுதவியை அறிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -