திருகோணமலையில் 180 மில்லிகிராம் ஹேரொயின் போதைப் பொருளுடன் ஐந்து சந்தேக நபர்கள் கைது.


எப்.முபாரக் -

திருகோணமலையில் 180 மில்லிகிராம் ஹேரொயின் போதைப் பொருளுடன் ஐந்து சந்தேக நபர்களை நேற்றிரவு(16) கைது செய்துள்ளதாக திருகோணமலை தலைமையக போதைப் பொருள் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சீனக்குடா, சுமேதகம,கொட்பே மற்றும் நான்காம் கட்டை பகுதியைச் சேர்ந்த 21,25,22 மற்றும் 24 வயதுடைய ஐவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் மூவர் தலா நாற்பது மில்லிகிராம் ஹேரொயின் போதைப்பொருளை வைத்திருந்த நிலையிலும், இருவர் தலா முப்பது மில்லிகிராம் ஹேரொயின் போதைப்பொருளை தமது உடைமையில் வைத்திருந்த நிலையில் திருகோணமலை கண்டி பிரதான வீதியில் வைத்து ஐந்து சந்தேக நபர்களையும் 180 மில்லிகிராம் ஹேரொயின் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என்றும் பொலிஸார் தெரிவிப்பதோடு,சந்தேக நபர்கள் ஐவரையும் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு,திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -