பொது இடங்களில் ஒரு மீற்றர் இடைவெளிவிட்டு நிற்காதோருக்கு13 லட்சம் ரூபா அபராதம்!

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-

சிங்கப்பூரில் பொது இடங்களில்ஒரு மீட்டர் தூரத்துக்கு மக்கள் பரஸ்பரம் ஒருவரிடமிருந்து ஒருவர் விலகி இருக்கவில்லையெனில், S$10,000 ( சுமார் 13 லட்சம் ரூபா ) அபராதம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சு அதிரடியாக அறிவித்துள்ளது.

மலேசியா, சிங்கப்பூர் நாடுகளிலும் கொரோனா நோய் தொற்று வேகமாக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மலேசியாவில் 26 பேர் கொரோனாவால் இதுவரை உயிரிழந்துள்ளனர் . 2,160க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.

இதேபோல் சிங்கப்பூரிலும் கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். 730க்கும் அதிமானோர் பாதிக்கப்பட்டும் உள்ளனர். இதனையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை இந்த நாடுகள் தீவிரமாக அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகின்றன.
சிங்கப்பூரில் அலுவலகங்கள், பாடசாலைகளை தவிர பிற இடங்களில் 10 பேருக்கு அதிகமாக ஒன்று கூடக்கூடாது, பொது இடங்களில் அனைவரும் 1 மீட்டர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அனைத்து நிகழ்ச்சிகளிலும் இருக்கைகள் 1 மீட்டர் இடைவெளியில் அமைக்கப்பட வேண்டும்.

இத்தகைய பாதுகாப்பு இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு S$10,000 அபராதம் விதிக்கப்படும் அல்லது 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் அல்லது இரு தண்டனைகளும் சேர்த்து விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நடைமுறை இன்று முதல் சிங்கப்பூர் நாடு முழுவதும் அமுலுக்கு வந்துள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -