கல்முனையில் சமூர்த்தி உதவிபெறும் குடும்பங்களுக்கு 25 மில்லியன் ரூபா நிதி..

ஏ.எல்.எம்.ஷினாஸ்-

திமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் விசேட ஆலோசனைக்கு அமைய தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதரண நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சமூர்த்தி உதவிபெறும் குடும்பங்களுக்கு வட்டியில்லா கடன் திட்டத்தின் கீழ் 10000.00 ருபா வழங்கும் நிகழ்வு (26.03.2020) கல்முனை பெரியநீலாவணை வீட்டுத்திட்டத்தில் இடம்பெற்றது.
நற்பட்டிமுனை–மருதமுனை சமூர்த்தி வங்கி முகாமையாளர் சட்டத்தரணி எம்.எம்.முபீன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதேசசெயலாளர் எம்.எம்.நஸீர்,சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி.எ.நஜீம் உள்ளிட்ட குழுவினர் பயனாளிகளின் வீடகளுக்கு சென்று காசோலைகளை வழங்கிவைத்தனர்.

கல்முனை பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள 29 கிராமசேவையாளர் பிரிவுகளிலும் உள்ள சமூர்த்தி பயனாளிகளுக்கு 25 மில்லியன் ரூபா நிதி பகிர்தளிக்கப்படவுள்ளது என பிரதேசசெயலாளர் இங்கு தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -