பத்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சிவில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் கைது

எப்.முபாரக் 2029-

திருகோணமலை- கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 92ம் கட்டை பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சிவில் பாதுகாப்பு படை வீரர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் நேற்று(26) சிறுமியின் தந்தை முறைப்பாடு செய்ததையடுத்தே இன்று சிவில் பாதுகாப்பு படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கன்தலாவ உப சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் கடமையாற்றி வரும் கந்தளாய், வெண்றாசன்புர பகுதியைச் சேர்ந்த கபில ஜயசூரிய 40 வயது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது பாதிக்கப்பட்ட சிறுமி கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை கைது செய்யப்பட்ட சிவில் பாதுகாப்பு படை வீரரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -