அகில இலங்கை சமாதான நீதிவானாக சத்திய பிரமாணம்,

ஹஸ்பர் ஏ ஹலீம்-

திருகோணமலை வெள்ளை மணல் கருமலையூற்று பகுதியைச் சேர்ந்த அப்துல் வகாப் - பரீஸ் அண்மையில் திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.பி முகைதீன் முன்னிலையில் தீவு முழுவதற்குமான சமாதான நீதிவானாக சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

இவர் இவர் தனது ஆரம்பிக்கல்வி முதல உயர் கல்வி வரை தி- அல்- அக்ஸா கல்லூரியிலும் பீ.ஏ ,பட்டப்படிப்பினை இந்தியா தஞ்சாவூரில் பல் கலைக் கழகத்திலும் , நிறைவு செய்துள்ளார்.

இவர் கலாசார நிகழ்வுகளில் பங்கு கொண்டு பல பரிசில்களையும் , பாவோதல், பேச்சு , இசை, பாடல் போன்ற பல நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு முதலிடங்களையும் பெற்றுள்ளார்.

மற்றும் இஸ்லாமிய சமூக சேவை ஒன்றியத்தின் தலைவராகவும்,ரஹ்மி விளையாட்டு கழகத்தின் தலைவராகவும் கருமமாற்றியும் வருகின்றார்.

இவர் அப்துல் கமீது- அப்துல் வகாப் , முகம்மது சரீப்- தங்கம்மா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -