மர்ம நபர்கள் கிராம சேவையாளர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு பண மோசடி செய்துள்ளனர்.

யாழ் நல்லூர் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கிராம சேவையாளர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் 39 ஆயிரம் ரூபாய் வரையில் பண மோசடி செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

நல்லூர் பிரதேச செயலக கிராம சேவையாளர்கள் பலரை இன்றைய தினம் (21) தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் தாம் ஜனாதிபதி செயலக அதிகாரிகள் என அறிமுகப்படுத்தி கொண்டு “உங்கள் கிராம சேவையாளர் பிரிவுகளில் போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க நாம் உங்கள் கிராமத்திற்கு வரவுள்ளோம். அதற்கான செலவீன பணத்தை ‘ஈசி காஸ்’ மூலம் அனுப்பி வையுங்கள்” என கோரியுள்ளனர்.

அதனை அடுத்து ஒரு கிராம சேவையாளர் 14 ஆயிரம் ரூபாயையும் மற்றையவர் 25 ஆயிரம் ரூபாய் பணத்தினையும் ‘ஈசி காஸ்’ மூலம் அனுப்பியுள்ளனர். ஏனைய கிராம சேவையாளர்கள் சுதாகரித்து கொண்டு தாம் ஏமாறாமல் தப்பிக்கொண்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஏமாற்றப்பட்ட கிராம சேவையாளர்கள் முறைப்பாடு பதிவு செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.ஐபிசி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -