எரோல் வன பாதுகாப்பு பகுதியில் பாரிய தீ 30 மேற்பட்ட ஏக்கர்கள் தீக்கிரை.


ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
ட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் எரோல் வன பாதுகாப்பு பகுதியில் நேற்று (08) திகதி இரவு 8.00 மணியளவில் இனந்தெரியாதவர்கள் வைக்கப்பட்ட தீக்காரணமாக சுமார் 30 ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பகுதி தீக்கிரையாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மலையகப்பகுதியில் தற்போது வரட்சியான காலநிலை நிலவுவதனாலும் அதிக காற்று காரணமாகவும் தீ மிக வேகமாக பரவியுள்ளன.
இதனால் இந்த காட்டுப்பகுதில் உள்ள நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும் இங்கு வாழும் விலங்குகள்,சிறிய உயிரினங்கள் இறந்து போய் இருக்கலாம.; என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தீ காரணமாக அறிவகை மருந்து பொருட்கள் எமது நாட்டுக்கே உரிதான தாவரங்கள் உட்பட அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.
குறித்த தீ மிருகங்களை வேட்டையாடுவதற்கு அல்லது மழை பெய்யும் என்ற மூட நம்பிக்கையில் வைக்கப்பட்டிருக்கலாம.; என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
இந்த ஹட்டன் .கொமர்சல் ஆகிய பகுதிகளுக்கு குடி நீர் பெருவதனால் எதிர்காலத்தில் பாரிய குடி நீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கும் வாய்ப்பு காணப்படுவதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
எது எவ்வாறான போதிலும் காடுகளுக்கு தீ வைப்பதனால் பாரிய சூழல் சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதனாலும், இவ்வாறு தீ வைப்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -