ஒலுவில் எம்.ஜே.எம்.பாரிஸ்-ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஜக்கிய ராஜ்ஜியம் ( UK ) விலகுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை ஜக்கிய ராஜ்ஜியத்தின் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தீவிரப்படுத்தி வருகிறார். அந்த வகையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஜக்கிய ராஜ்ஜியம் விலகுவதற்கான முறையான ஒப்பந்தத்தில் ஜக்கிய ராஜ்ஜியம் பிரதமர் போரிஸ் ஜோன்சன் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டார்.
லண்டனில் டவுனிங் வீதியில் அமைந்துள்ள ஜக்கிய ராஜ்ஜிய பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜக்கிய ராஜ்ஜிய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் முன்னிலையில் அவர் கையெழுத்திட்டார்.
முன்னதாக இந்த ஒப்பந்தத்தை பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸிலிருந்து ஜக்கிய ராஜ்ஜிய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கொண்டு வந்தனர். இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டதை ஜக்கிய ராஜ்ஜிய வரலாற்றில் புதிய அத்தியாயம் என ஜக்கிய ராஜ்ஜிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் வர்ணித்தார்.
இந்த ஒப்பந்தம், மீண்டும் பிரஸல்ஸ் எடுத்துச்செல்லப்படுகிறது. ஐரோப்பிய நாடாளுமன்றம் அதற்கு ஒப்புதல் அளிக்கிறது. அதைத் தொடர்ந்து வரும் 31ம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஜக்கிய ராஜ்ஜியம் வெளியேறிவிடும்.