வன்னி இளைஞர்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வு

ன்னி மாவட்டத்தில் தொழில் வாய்ப்புக்களின்றி வாழும் இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்கும் முகமாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்களின் பன்முகப் படுத்தப்பட்ட நிதியிலிருந்து சுமார் இருபது இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் சாரதிகளாக பயிற்றப்பட்டு சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வு நேற்று வவுனியாவில் இடம்பெற்றது.

இன்றைய தினம் சுமார் 84 இளைஞர் யுவதிகள் கெளரவ காதர் மஸ்தான் அவர்களிடமிருந்து சாரதி அனுமதிப் பத்திரங்களை பெற்றுக் கொண்டதோடு தமது விடயங்களில் எப்பொழுதும் அக்கறை யோடு செயற்படும் கெளரவ காதர் மஸ்தான் அவர்களுக்கு தமது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
கெளரவ காதர் மஸ்தான் அவர்களின் இந்த சாரதி பயிற்சி வழங்கும் செயற்றிட்டம் வன்னி மாவட்டத்தில் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -