முசலி வடக்கு தெற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கான காணி 1/2 ஏக்கர் இன்று உத்தியோக பூர்வமாக முசலிப்பிரதேச செயலாளரினால் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
முசலிப்பிரதேசத்தில் நீண்டகால இருந்துவரும் எரிபொருள் நிரப்பும் நிலைய பிரச்சினையை முடிவு கட்டும் விதமாக முசலிப்பிரதேச செயலாளருடன் முசலி வடக்கு தெற்கு பலநோக்கு கூட்டுறவு சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இந்த காணியை வழங்கும் முடிவு எடுக்கப்பட்டு இன்று (28) அதற்கான இடத்தை முசலி பிரதேச செயலக நிலஅளவை அதிகாரியினால் கூட்டுறவு சங்கத்திடம் வழங்கப்பட்டது...
இந்த நிகழ்வில் முசலி வடக்கு தெற்கு கூட்டுறவு சங்க தலைவர் தாஹிர் மற்றும் பிரதி தலைவர் சலாஹுதீன் உட்பட உறுப்பின்பர்களும் பிரதேச செயலக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -