கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் செல்ல இணைப்புச் சேவை..

ஐ. ஏ. காதிர் கான்-

ட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பொதுப் போக்குவரத்தில் பயணிப்போர், சுமார் அரை மைல் தூரத்திற்கு அதிகமாக நடந்தே செல்ல வேண்டியிருந்த நிலையை சீர் செய்யும் வகையில், அத்தூரத்தைக் கடக்க விசேட இணைப்புச் சேவைகள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

பதினைந்து நிமிடத்துக்கு ஒரு முறை இந்த இணைப்புச் சேவை, 28 ஆம் திகதி முதல் இடம்பெற்று வருகிறது.

இந்தியாவுக்கான விஜயத்தினை (28) மேற்கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் சாதாரண பயணிகளைப் போன்றே அந்த தூரத்தை நடந்தே விமான நிலையத்தை சென்றடைந்தார். அவர் அதன் மூலம் முன்மாதிரியாகச் செயற்பட்டார்.
எனினும், அதனைப் பின்பற்றி எதிர்காலத்தில் அமைச்சர்களும் இவ்வாறு செயற்படுவது அவர்களது முடிவாகும் என்று, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

எனினும், அமைச்சர்கள் தமக்குள்ள உரிமையைப் பெற்றுக்கொள்ள முடியும். அந்த வகையில், அவர்கள் விருப்பம் போல பயணிக்க முடியும் என்றும், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -