கல்குடா லொறி உரிமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு காவத்தமுனை பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கும், பாதிக்கப்பட்டு உறவினர்களின் வீடுகளில் வசித்து வரும் குடும்பங்களுக்கும் சமைத்த உணவுப் பொதிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த சங்க உறுப்பினர்களின் அயராத முயற்சியால் சுமார் 450 பேருக்கு சமைத்த உணவுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இவ் உணவு வழங்கும் வேலைத்திட்டத்தில் அமைப்பின் உறுப்பினர்களான எம்.ஐ.எம். நியாஸ், எம்.எஸ். நிஜார், எம்.எம். பர்ஹான், யூ.எல். நஜீம் ஆகியவர்களோடு காவத்தமுனை ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் மீரான் ஹாஜியாரும் களத்தில் நின்று செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.