திருகோணமலை மாவட்டத்தின் வறுமை கோட்டின் கீழ் வாழும் பாடசாலை செல்லும் 1000 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தின் வறுமை கோட்டின் கீழ் வாழும் பாடசாலை செல்லும் 1000 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி (30 )வைக்கப்பட்டன.
பெமிலி றிலீப் மற்றும் ரெக்டோ நிறுவனங்கள் இணைந்து பாடசாலை செல்கின்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மாணவர்கள் 1000 பேருக்கு இவ்வாறு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இம்மாவட்டத்தின் உள்ள கந்தளாய், தம்பலாகாமம்,பதவிசிறிபுர,கிண்ணியா மற்றும் மூதூர் போன்ற பிரதேசங்களில் வாழுகின்ற வறுமை நிலையிலுள்ள பிள்ளைகளுக்கே இவ்வாறு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வுக்கு கந்தளாய் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருவாளர் முஜீப்,மற்றும் உத்தியோகத்தர்கள்,பெமிலி றிலீப்,ரெக்டோ நிறுவன உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -